முன்னால் காதலியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றியவருக்கு - இரண்டு வருட சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
முன்னால் காதலியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றியவருக்கு  இரண்டு வருட சிறை!!

தன் முன்னால் காதலியின் முழு நிர்வாண படத்தை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பகிர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
Guyancourt (Yvelines) பகுதியில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படுள்ளது. குறித்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு, சமூகவலைத்தளமான ஃபேஸ்புகில் போலியான கணக்கு ஒன்றை ஆரம்பித்து, அதில் தன் முன்னால் காதலியின் நிர்வாண் படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அப்பெண்ணின் குழந்தைகளின் புகைப்படங்களுடன் சில ஆபாச வார்த்தைகளையும் பதிவேற்றியிருந்துள்ளார். குறித்த பெண்மணிக்கு இது 2016 ஆம் ஆண்டில் தான் தெரியவந்துள்ளது. அவர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். 
 
விசாரணைகளில் குறித்த ஃபேஸ்புக் கணக்கை பெண்ணின் முன்னால் காதலன் ஆரம்பித்துள்ளமை தெரியவந்துள்ளது. மிக நெருக்கமான புகைப்படங்கள், பெண்ணின் கணவர் குழந்தைகள் என அனைவரது புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து 40 வயதான குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணைகளில் 'இது விளையாட்டுக்குச் செய்தேன்!' என தெரிவித்ததாக அறியமுடிகிறது. அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி 40 வயதுடைய நபருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூலக்கதை