ஜேர்மன், இத்தாலி உட்பட வெளிநாட்டவர்கள் 12 பேர் சிறிலங்காவில் கைது!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜேர்மன், இத்தாலி உட்பட வெளிநாட்டவர்கள் 12 பேர் சிறிலங்காவில் கைது!

 குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சட்டத் திட்டங்களை மீறி, சிறிலங்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
வர்த்தகத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகளின் விசா காலவதியாகிய நிலையிலும் அவர்கள் சிறிலங்காவில் தங்கியுள்ளனர்.
 
இந்த நிலையிலேயே குறித்த வெளிநாட்டு பிரஜைகள் 12 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
மெதவத்த, பொல்ஹென, மதிஹா, மிரிஸ்ஸ, வெலிகம மற்றும் அலுத்கம பகுதியில் வாடகை வீடு ஒன்றில் குறித்த வெளிநாட்டவர்கள் தங்கியிருந்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் ஜேர்மன்,இத்தாலி,ரஷ்யா ஆகிய நாட்டை சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
சம்பவம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

மூலக்கதை