யூதர்களின் 13 கல்லறைகள் உடைப்பு! - விபத்தினால் ஏற்பட்ட விபரீதம்!!
கடந்த திங்கட்கிழமை Pantin பகுதியில் உள்ள இடுகாட்டில் உள்ள 13 கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். விசாரணைகளின் பின்னர், இது ஒரு விபத்து என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை Pantin இந்த முறைப்பாடு காவல்துறையினரிடம் வழங்கப்பட்டிருந்தது. யூதர்களின் 13 கல்லறைகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இந்த செயலை செய்த சமூக விரோதிகளை கைது செய்யுங்கள் என கோரப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் ஒரு விபத்தினால் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் வகை வாகனம் ஒன்றே மேற்படி கல்லறைகளை இடித்து உடைத்துள்ளது என்றும்..., இது உள்நோக்கமற்ற விபத்து எனவும் தெரிவித்துள்ளனர்.
Seine-Saint-Denis பகுதி காவல்துறையினர் தெரிவிக்கும் போது, கடந்த திங்கட்கிழமை இரவு, அதிவேகமாக வந்த ட்ரக் வகை வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மகிழுந்து ஒன்றில் மோதுவதைத் தவிர்க்கவே வாகனத்தை வேறு திசைக்கு திருப்பியுள்ளார். அப்போதே இந்த கல்லறைகள் மீது மோதுப்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த வாகனத்தின் சாரதி பரிஸ் 9 ஆம் வட்டாரத்தைச் சேந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.