மயாமி ஓபன் டென்னிஸ்: வெஸ்னினா அதிர்ச்சி தோல்வி

தினகரன்  தினகரன்

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனையான எலீனா வெஸ்னினா 2ம் சுற்றில் அதிர்ச்சித்  தோல்வி அடைந்தார். அமெரிக்காவில் நடக்கும் இத்தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் இரவு  நடந்தன. இதில், 13ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் வெஸ்னினா 6-3, 4-6, 5-7 என்ற செட்களில் குரோஷியாவின் அஜ்லா  தோம்ஜன்கோவிச்சிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு போட்டியில், நம்பர்-1 வீராங்கனையான ஜெர்மனியின் கெர்பர் 7-6, 6-2 என்ற  செட்களில் சீனாவின் யிங் யிங் டுயனை வென்றார். ரோமானியாவின் ஹேலெப், ஸ்பெயினின் முகுருசா, அமெரிக்காவின் வீனஸ்  வில்லியம்ஸ், ரஷ்யாவின் கஸ்னட்சோவா உள்ளிட்டோர் 3ம் சுற்றுக்கு முன்னேறினர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் ரபெல் நடால் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இஸ்ரேலின் டுடி செலாவை வென்று 3ம் சுற்றுக்கு  தகுதி பெற்றார். போபண்ணா தோல்வி: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பப்லோ கியவாஸ்  ஜோடி 5-7, 6-3, 7-10 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ், மேட் ரெய்ட் ஜோடியிடம் முதல் சுற்றிலேயே தோற்று  ஏமாற்றமளித்தது.

மூலக்கதை