சகஜ நிலைக்கு திரும்பிய பாவனா

தமிழ் முரசு  தமிழ் முரசு
சகஜ நிலைக்கு திரும்பிய பாவனா

பாலியல் தொல்லைக்கு ஆளான பாவனா சம்பவம் நடந்ததிலிருந்து மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். நடிகை மஞ்சு வாரியர், இயக்குனர் லால் போன்றவர்கள் அவருக்கு உடனிருந்து ஆறுதல் கூறினர்.

அத்துடன் குடும்பத்தினர் பாவனாவுக்கு துணை நின்றதுடன் காதலன் நவீனும் உடனடியாக திருமண நிச்சயதார்த்தத்துக்கு சம்மதித்தார். பாவனாவுக்கு நடிகர் பிருத்விராஜ் தைரியம் தந்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கும்படி வற்புறுத்தினார்.

அதை ஏற்று ‘ஆடம்’ படத்தில் நடிக்க தொடங்கினார் பாவனா. தொடர்ந்து கன்னட படப்பிடிப்பில் சிவராஜ்குமாருடன் பங்கேற்று நடித்தார்.



தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியவர்களை போலீசார் கைது செய்தவுடனே மனஅழுத்தத்திலிருந்து மெல்ல மீளத் தொடங்கிய பாவனா சக நட்சத்திரங்கள், உறவினர்கள், காதலன் போன்றவர்களின் ஆறுதல் வார்த்தைகளால் பழைய உற்சாகத்திற்கு திரும்பியிருக்கிறார். கிசுகிசு வந்தாலே சில ஹீரோயின்கள் அதை சாக்காக சொல்லி பட புரமோஷன்களுக்கு வருவதை தவிர்த்து விடுகின்றனர்.

ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளானவராக இருந்தபோதிலும் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்றார் பாவனா. அவர் நடிக்கும் ஹனி பி -2 படத்தின் புரமோஷன் கேரளாவில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு சகஜமாக அனைவரிடம் பேசி பழகினார்.

பாவனாவின் தைரியத்தை படக் குழுவினர் பாராட்டினர்.

.

மூலக்கதை