சிறுமி மீது எரிவாயு திரவம் வீச்சு! - பெண் கைது!!
மூன்று வயதுடைய சிறுமி ஒருவர் மீது எரியும் தன்மை கொண்ட திரவத்தை வேண்டுமென்றே ஊற்றிய பெண் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
Oise இன் Auneuil பகுதியில் இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியின் உடல்பாகங்கள் எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். அதைத்தொடந்து நேற்று வியாழக்கிழமை 37 வயதுடைய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பெண் சிறுமியில் உறவினர் என்றும், கொலை செய்யும் நோக்கில் வேண்டுமென்றே எரிவாயு திரவத்தை சிறுமி மீது ஊற்றியுள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் கைது செய்து, 'சிறுமியை கொலை செய்ய முயன்ற' குற்றத்தின் அடிப்படையில் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க குறித்த பெண் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்குரிய காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.