பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் விராட் கோஹ்லி மீது மாஜி. ஆஸி. வீரர் பாய்ச்சல்
மெல்போர்ன்: இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் எப்போது நடந்தாலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் விளையாடி வரும் நிலையில், பரபரப்புக்கு மத்தியில் சர்ச்சைகளும் வெடித்துள்ளன.
டிஆர்எஸ் சர்ச்சையில் ஸ்மித் சிக்கியநிலையில், ஆத்திரத்தில் ஆஸ்திரேலிய வீரர்களும் விராட்கோஹ்லியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்நாட்டு ஊடகங்களும் கோஹ்லியை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜெப் லாசன் கோஹ்லி மீது சாடி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், கோஹ்லிக்கு பொறுப்புகள் அதிகம் கிடைத்து விட்டது.
அணித்தலைவர் என்ற முறையில் அவர் சிறப்பாக நடத்தையை காட்ட வேண்டும். கோஹ்லி மோசமான நடத்தை வீரர் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். 2வது டெஸ்ட் போட்டியில் அவரின் மோசமான நடவடிக்கையை களத்தில் பார்க்க முடிந்தது. அவர் முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
.