‘இனிமேல்தான் ஆட்டமே இருக்கு’ குரல் கொடுக்கும் தனுஷ்
தனுஷ் யார் மகன் என்ற வழக்கு ஒரு பக்கம் கோர்ட்டில் நடந்து வந்தபோதும் நடிப்பிலிருந்து கவனத்தை சிதற விடாமல் பக்குவமாக பணிகளை மேற்கொண்டிருக்கிறார். தற்போது இயக்குனர் பொறுப்பும் ஏற்றிருக்கிறார்.
முதன்முறையாக அவர் இயக்கும் படம் ‘பவர் பாண்டி’. தமிழ் புத்தாண்டில் இப்படம் வெளியாக உள்ளது.
இதன் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. 60 வயது பெரியவரான ராஜ்கிரணின் காதல், கோபம், பேத்திகளிடம் பாசம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
ரேவதி, சாயாசிங், பிரசன்னா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். டீஸரில் ‘ஆட்டம் முடிஞ்சதே மாப்ளே’ என்ற குரலுக்கு ‘இனிமேல்தாண்டி ஆட்டம் ஆரம்பம்’ என பதில் குரலாக தனுஷின் குரல் கேட்கிறது.