பரிசில் குழுமோதல்! - ஒருவர் பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசில் குழுமோதல்!  ஒருவர் பலி!!

பரிசில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 
 
நேற்று செவ்வாய்க்கிழமை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்கள் வெடித்துள்ளது. இரண்டு வட்டாரங்களைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவில் 10 பேர்வரை இருந்ததாகவும், மொத்தம் 20 பேர்வரை மோதலில் ஈடுபட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாலை 7.30 அளவில் இடம்பெற்ற இம்மோதலுக்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதைத் தொடர்ந்து, நபர் ஒருவர் பலியாகியுள்ளார். பல்வேறு வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் இரும்பு கம்பி ஒன்றின் மூலம் தாக்கப்பட்டுள்ளதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. வன்முறை தொடர்பான விசாரணைகளை 2 ஆம் வட்டார காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

மூலக்கதை