பாக். வீரர்களின் பேராசை கிரிக்கெட்டை காயப்படுத்தி விட்டது - பயிற்சியாளர் வேதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாக். வீரர்களின் பேராசை கிரிக்கெட்டை காயப்படுத்தி விட்டது  பயிற்சியாளர் வேதனை

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பிஎஸ்எல் டி. 20 தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டின் முன்னணி வீரர்களான சர்ஜில்கான், காலித் லத்திப், முகமது இர்பான், நசிர்ஜாம்ஷெட், ஷாசைப்கான் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மிக்கி ஆர்தர் கூறியிருப்பதாவது: வீரர்கள் தங்கள் நடவடிக்கைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

வீரர்களின் பேராசையால் சர்வதேச அளவில் கிரிக்கெட்டை பாகிஸ்தான் காயப்படுத்தி விட்டது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய தொடரின் போது  சர்ஜில்கான் 3 அரைசதம் விளாசினார்.

அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிற்கு ஏற்ற வீரராக மாறி வந்தார். ஆனால் இதுபோன்ற விஷயங்களில் வீரர்கள் சிக்குவது வருத்தமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


.

மூலக்கதை