கல்லறையில் இருந்து 42 சவப்பெட்டிகள் திருட்டு! - குழப்பத்தில் காவல்துறையினர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கல்லறையில் இருந்து 42 சவப்பெட்டிகள் திருட்டு!  குழப்பத்தில் காவல்துறையினர்!!

கடந்தவாரத்தில் Saône-et-Loire இல் உள்ள கல்லறை ஒன்றில் இருந்து 42 சவப்பெட்டிகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை  காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். 
 
Saône-et-Loire மாவட்டத்தின் Saint-Cyr கிராமத்தில் உள்ள கல்லறைகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரே வாரத்தில் இவ்வாறு 42 கல்லறைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ள. சவப்பெட்டிகளுக்குள் கிடைக்கும் பல பொருட்களை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டையகால சவப்பெட்டிகளை குறிவைத்து திருடப்பட்டும் உடைக்கப்பட்டும் வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. காவல்துறையினர் பெரும் குழப்பத்துக்கு மத்தியில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளர். இனவாதம் காரணமாக இக்கல்லறைகள் உடைக்கப்படுகின்றனவா என்ற ரீதியில் விசாரணைகள் மேற்கொண்ட காவல்துறையினர், அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். 
 
தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இது சில குழுக்களின் காரணமற்ற வெறியாட்டம் என தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்தும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றால்.. அல்லது குறித்த வன்முறைக்கும்பல்களை காண நேரிட்டால் காவல்துறையினரை தொடர்புகொள்ளும்படி கோரப்பட்டுள்ளது.  
 
 
 

மூலக்கதை