இலங்கை அணியை அவமானப்படுத்திய பத்திரிக்கைகள்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை அணியை அவமானப்படுத்திய பத்திரிக்கைகள்!

வரலாற்று டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியிடம் இலங்கை தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை பத்திரிக்கைகள் அவமானப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இலங்கையுடன் மோதியது.
 
இதில் வங்கதேச அணி வெற்றி பெற்று 100வது டெஸ்டில் சரித்திரம் படைத்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.
 
இந்நிலையில் இலங்கை பத்திரிக்கைகள், இலங்கை அணி மரணமடைந்ததாகவும் அதன் சாம்பலை வங்கதேசம் எடுத்து சென்றதாகவும் தலைப்பு வெளியிட்டுள்ளது.
 
இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலிய அணி, கடந்த 1882ல் வென்ற போது இதே தலைப்பை இங்கிலாந்து பத்திரிக்கைகள் வெளியிட்டது. இது தான் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் துவக்கமாகும்.
 
அதன்பின் சுமார் 135 ஆண்டுகளுக்கு பின் தற்போது இலங்கை அணி இதே அவமானத்தை கத்துக்குட்டி வங்கதேசத்திடம் சந்தித்துள்ளது.
 

மூலக்கதை