டிராவில் முடிந்த இந்திய -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி!

PARIS TAMIL  PARIS TAMIL
டிராவில் முடிந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி!

 ராஞ்சியில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

 
152 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய தொடக்க வீரர் மேட் ரென்ஷா 15 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 21 ரன்களிலும் வெளியேறினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 63 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து போராடியது. பின்னர் ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
 
மார்ஷ் 53 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 எடுத்திருந்த போது ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா 4 விக்கெட்டு‌ளை வீழ்த்தினார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் நான்காவது போட்டி வரும் 25-ந்தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

மூலக்கதை