அமலாபால்,விஜய் இனி தனி தனி!

PARIS TAMIL  PARIS TAMIL
அமலாபால்,விஜய் இனி தனி தனி!

சென்னை குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கி விட்டது.            

நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் காதலித்தார்கள். விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்து, கல்யாணம் செய்துகொண்டார்கள்.
 
விஜயின் வீடு ரொம்ப கட்டுப்பெட்டியானது. அவர்கள் எதிர்த்தாலும், அவர்களை சமாதானப்படுத்தி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அமலாவுக்கு வயது அப்போது 23. விஜய் மேல் தனிப்பட்ட பிரியம் காதலாகி கல்யாணத்தில் முடிந்தாலும், அமலாவுக்கு புகுந்த வீட்டின் கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை.
 
கொஞ்சம் கொஞ்சமாக திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள்ளாகவே கல்யாண வாழ்க்கை கசக்க ஆரம்பித்து. இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். அமலாவுக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவரை விவாகரத்து வரை கூட்டிச்சென்றது.
 
இவர்கள் விவாகரத்தில் தனுஷும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், அமலா அதனை மறுத்தார். இருவரும் மனமொத்து பிரிவதாக ஆறு மாதம் முன்பு விவாகரத்துக்கு மனு தந்தனர்.
 
மனு தந்த கையோடு, பல படங்களில் கமிட் ஆனார் அமலா. நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, பார்ட்டிகளுக்கு போவது என்று ஏகப்பட்ட கமிட்மெண்டு களில் திளைக்க ஆரம்பித்தார் அமலா.
 
நேற்றிலிருந்து இன்னும் ப்ரீ பேர்ட் ஆகி விட்டார் அமலா. நேற்று

சென்னை குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கி விட்டது.            

மூலக்கதை