இதுதாங்க கமல் ஹாஸன் எழுதாத அந்த 'நீள் கவிதை!'

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதுதாங்க கமல் ஹாஸன் எழுதாத அந்த நீள் கவிதை!

சிங்கமில்லாக் காடு

செங்கோல் வாங்கிய சிங்கமொன்றுஜெயமாய்க் காட்டை ஆண்டது

மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்மர்மமாய் அதுவும் மாண்டது

உடனிருந்த கள்ள நரியொன்றின்உள்ளத்தில் ஆசையோ மூண்டது

புசிக்கலாம் இந்தக் காட்டையென்றேபுதிய வேடம் பூண்டது!

வேரில் ஊற்றிய வெந்நீராய்வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோதியான நாடகம் போட்டது!

ஊரில் உள்ள உத்தமர்கள்ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமெனதேரில் தன்னை ஏற்றிடவேதிருடர்கள் துணையைக் கேட்டது!

அத்தை மறைந்த நல்வாய்ப்பில்தத்தை ஒன்றும் கிளையமர்ந்துவிழியில் தீபம் ஏற்றியேவித்தைக் காட்டத் தொடங்கியது!

நத்தை வேகத்தில் நகர்ந்தவொருசொத்தை வாங்கிய வழக்கினதுதிருத்தி எழுதிய தீர்ப்பாலேநரியின் கனவோ முடங்கியது!

காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்தஅடிமை விலங்குகள் ஓரிடத்தில்அவரவர் வேலையை மறந்துவிட்டுஅடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!

காசை வாங்கி வாக்களித்தகானகத்து உயிர்களெல்லாம்ஆசை வெறுத்த மனத்துடனேஅடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!

அட துணிச்சலா எழுதியிருக்காங்களே என்கிறீர்களா... அதனால்தான் மன்னிப்பு  கேட்கச் சொல்கிறார் உலக நாயகன். இதை எழுதிய கவிஞன் யாருங்கோ?

மூலக்கதை