மீண்டும் போர்க்களமாக மாறும் யாழ்ப்பாணம்!

PARIS TAMIL  PARIS TAMIL
மீண்டும் போர்க்களமாக மாறும் யாழ்ப்பாணம்!

 அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் சமூக சீர்கேடுகளை விளைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

 
இந்நிலையில் சமூக விரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் அச்சுறுத்தலை முறியடிக்க ஆயுதம் தாங்கிய நடமாடும் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
காங்கேசன்துறை பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் நிலையங்களிலும் ஏற்கனவே இந்த பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் இந்த பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடும்.
 
எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற ஐந்து பொலிஸார் ஒவ்வொரு குழுவிலும், இணைக்கப்பட்டுள்ளனர்.
 
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வீதித்தடைகளை ஏற்படுத்தி, சந்தேகத்துக்குரிய வாகனங்களைச் சோதனையிடுவதற்கும் இந்த காவல்துறை குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அண்மைக்காலமாக வாள்வெட்டு கலாசாரம் தீவிரமடைந்துள்ளதுடன், பெருமளவானோர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை