பிரமாண்டாக நடைபெற்ற திருமண வைபவம்! திடீரென மாயமான மணப்பெண்

PARIS TAMIL  PARIS TAMIL
பிரமாண்டாக நடைபெற்ற திருமண வைபவம்! திடீரென மாயமான மணப்பெண்

 சிறிலங்காவின் தென்பகுதியான அளுத்கமவில் நடைபெற்ற திருணம நிகழ்வில் மணப்பெண் திடீரென காணாமல் போன சம்பவம் பதிவாகியுள்ளது. 

 
அளுத்கம பகுதியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மாப்பிள்ளை, இரு வீட்டாரின் பெற்றோர் மற்றும் வருகை தந்திருந்தவர்களுக்கு ஒரு சோகமான முடிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
திருமணம் மற்றும் பாரம்பரிய சம்பிரதாயங்களின் பின்னர் மணப்பெண் திடீரென காணாமல் போயுள்ளமையே இதற்கு காரணமாகும்.
 
குறித்த மணப்பெண்ணின் பெற்றோர் தகுதியான மாப்பிள்ளையை தெரிவு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அந்தப் பகுதியிலுள்ள மிகபெரிய ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
 
இந்த நிகழ்விற்காக கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்வின் பின்னர் அனைவரும் மதுவில் மூழ்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
திடீரென உறவினர்கள் மணப்பெண் காணாமல் போயுள்ளதனை உணர்ந்து ஹோட்டலின் அனைத்து பகுதிகளிலும் தேடியுள்ளனர்.
 
அனைவரும் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில், மண்டபத்தின் நுழைவாயிற்கு வந்த காரில் மணப்பெண் ஏறிச் சென்றதனை அங்கிருந்த நண்பர்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர். 
 
அம்பலங்கொட பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

மூலக்கதை