பேஸ்புக் பயன்படுத்துவர்களுக்கு சிறிலங்கா பொலிஸார் எச்சரிக்கை!
சிறிலங்காவில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேஸ்புக் ஊடாக அறிமுகம் ஆகும் நண்பர்களிடம் சொந்த விபரங்களை வழங்க வேண்டாம் என கோரியுள்ளனர்.
இவ்வாறு தகவல்களை வழங்குவதன் மூலம் பல்வேறு மோசடிகள் இடம்பெறக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் ஊடாக நட்புறவை ஏற்படுத்தி மோசடியான முறையில் பணம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சிறிலங்காவில் இருந்து நிதிமோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் 10 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.