Bobigny - துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயம்! - காவல்துறையினர் விசாரணை!!

PARIS TAMIL  PARIS TAMIL
Bobigny  துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயம்!  காவல்துறையினர் விசாரணை!!

நேற்று வெள்ளிக்கிழமை இரவு Bobigny நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

சம்ப தொடர்பான முதல்கட்ட விசாரணைகளின் படி, Seine-Saint-Denis இல் Bobigny நகரில், நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Pont de Pierre பகுதியில் நின்றிருந்த இளைஞர் குழுவை நோக்கி துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவருக்கு தொண்டை பகுதியிலும், ஒருவருக்கு கழுத்து பகுதியிலும், மேலும் ஒருவருக்கு முழங்காலிலும் காயமேற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்தும், காயமடைந்தவர்களின் பெயர் வயது போன்ற விபரங்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். 

மூலக்கதை