காவல்நிலையத்தின் மீதி தாக்குதல்! - இருவர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவல்நிலையத்தின் மீதி தாக்குதல்!  இருவர் கைது!!

இன்று வெள்ளிக்கிழமை காவல்நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி  Corsica வின் Ajaccio நகரில் உள்ள காவல்நிலையமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த காவல்நிலையம் மீது பெட்ரோல் எரிகுண்டு வீசியும், கற்கள் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கடந்த வருடம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் வன்முறை செயல்களில் ஈடுபட்டிருந்ததாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. எனினும் குறித்த இந்த தாக்குதலுக்குரிய காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

மூலக்கதை