Pantin - வீதியில் குழந்தை பெற்ற பெண்! - காவல்துறையினர் உதவி!!

PARIS TAMIL  PARIS TAMIL
Pantin  வீதியில் குழந்தை பெற்ற பெண்!  காவல்துறையினர் உதவி!!

வீதியில் பிரசவ வலி எடுத்த பெண் ஒருவருக்கு காவல்துறையினரும் உதவி செய்து, சுகப்பிரசவத்தில் குழந்த பிறந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று Pantin இல் இடம்பெற்றுள்ளது. 
 
சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது. Pantin இல் காவல்நிலையத்துக்கு அருகே, வீதியில் உள்ள மரத்துக்கு கீழே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணும் அவரது கணவரும் அவ்வழியே நடந்து செல்லும் போது, பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்ததாகவும், பனிக்குடம் உடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அங்கு நின்றிருந்த காவல்துறையினர் அழைக்கப்பட்டு மரத்தின் கீழ் வைத்து அப்பெண் குழந்தை பெற்றெடுக்க உதவியுள்ளார்கள். மறைப்புத் துணி கட்டி பிரசவம் பார்க்கப்பட்டது. குறித்த பெண் அழகான ஒரு பெண்குழந்தையை பிரசவித்துள்ளார். 
 
அதைத் தொடர்ந்து அவசரமாக குறித்த பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை