4வது சிங்கமாக மாற சூர்யா முடிவு
சூர்யா நடித்த சிங்கம் படத்தின் 3ம் பாகமாக சி3 படம் திரைக்கு வந்தது. ஹரி இயக்கினார்.
இப்படம் ரிலீஸ் ஆவதில் பல்வேறு தடங்கல் ஏற்பட்டது. படத்தை திருட்டு தனமாக வெளியிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என பட தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்தபோது இப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே இணைய தளத்தில் வெளியிடுவோம் என்று ஒரு இணைய தள பக்கம் மிரட்டல் விடுத்தது.
இதற்கு தடை கேட்டு கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு வழியாக தடை கிடைத்தது. இதையடுத்து அந்த இணைய தள பக்கம் முடக்கப்பட்டது.
இப்படத்தின் 4ம் பாகம் வெளிவருமா என்று சூர்யாவிடம் கேட்டபோது படத்தின் வரவேற்பை பொறுத்தே அது முடிவு செய்யப்படும் என்று முன்னர் பதில் அளித்திருந்தார். இதே கருத்தை இயக்குனரும் தெரிவித்தார்.
படம் வெளியாகி ‘100 கோடி வசூல் கிளப்’பில் சேர்ந்திருப்பதாக பட தரப்பு தற்போது தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் ஹரிக்கு நடிகர் சூர்யா, விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்தார்.
பட வெற்றியை தொடர்ந்து இதன் 4ம் பாகமும் திட்டமிடப்படும் என்று அவர் கூறி உள்ளார்.
.