மும்பையில் நாளை தொடக்கம் இந்தியா ஏ -ஆஸ்திரேலியா இடையே 3 நாள் பயிற்சி போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்பையில் நாளை தொடக்கம் இந்தியா ஏ ஆஸ்திரேலியா இடையே 3 நாள் பயிற்சி போட்டி

மும்பை: ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் டெஸ்ட் வரும் 23ம் தேதி முதல் புனேவில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்திய ஏ அணியுடன் 3 நாள் கொண்ட பயிற்சி போட்டியில் ஆஸி.   மோதுகிறது.

இந்த போட்டி நாளை மும்பையில் தொடங்குகிறது. இந்த முறை டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ள ஆஸி.

அணி பயிற்சி போட்டியில் முழு பலத்துடன் களம் இறங்குகிறது. குறிப்பாக சுழற்பந்து வீச்சை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் ஆஸி.

பேட்ஸ்மேன்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். ஹிர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய ஏ அணியில் ஸ்ரேயாஸ்  ஐயர், பாபா இந்திர ஜித், இசான் கிஷன், குல்திப் யாதவ், ரிஷப்பன்ட் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.   இவர்கள் ஆஸி.

அணிக்கு கடும் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


.

மூலக்கதை