அடுத்த மாதம் 20ஆம் திகதி ஐ.பி.எல் ஏலம்!

PARIS TAMIL  PARIS TAMIL
அடுத்த மாதம் 20ஆம் திகதி ஐ.பி.எல் ஏலம்!

 பெங்களுரு: ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் பிரச்சனைகளுக்கு பின் பிப்ரவரி 20ல் பெங்களுருவில் நடக்கும் என பி.சி.சி.ஐ., உறுதி செய்துள்ளது.

 
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி-20 தொடரான ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் நாளை பெங்களுருவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக வீரர்கள் ஏலத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
 
இந்த ஏலம் வரும் 26ல் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி நிலவிய பல்வேறு சர்ச்சைகளுக்கு பி.சி.சி.ஐ., தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 
 
கடந்த 2016ல் நடந்த ஐ.பி.எல்., தொடரில், கடைசி இடம் பிடித்த, பஞ்சாப் அணி கையில் ஏலத்திற்கான அதிக தொகையாக 23.35 கோடி மீதமுள்ளது. இதை தொடர்ந்து டில்லி அணியிடம் 23.1 கோடி, ஐதராபாத் அணியிடம் 20.1 கோடியும், பெங்களுரு அணியிடம் 12.82 கோடியும், மும்பை அணியிடம் 11.5 கோடியும் மிச்சமுள்ளது. இந்த தொகைகளுக்குள் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

மூலக்கதை