காவல்துறைக்கு எதிரான தாக்குதல்!! - 12 குற்றவாளிகள் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவல்துறைக்கு எதிரான தாக்குதல்!!  12 குற்றவாளிகள் கைது!!

கடந்த ஒக்டோபர் மாதம் காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 12 குற்றவாளிகள் கைது செய்யப்படுள்ளனர்.
 
கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி Essonne மாவட்டத்தில் உள்ள  Viry-Châtillon பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மீது பெட்ரோல் எரிகுண்டு தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் படுகாயமடைந்திருந்தனர். மேலும் அவர்களின் கண்காணிப்பு வாகனமும் எரியூட்டப்பட்டிருந்தது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில், இன்று புதன்கிழமை 12வது குற்றவாளியும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை 17 தொடக்கம் 19 வயது வரையான 11 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இதில் Grande Borne பகுதியில் 9 பேர்களும், மீதி மூவர் Seine-et-Marne மாவட்டத்தின் Etampes பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதை தொடர்ந்து, இன்று புதன்கிழமை காலை, 26 வயதுடைய 12 வது நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மூன்று மாத தொடர் விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை