ஆஸ்திரேலிய ஓபன் வெற்றியுடன் தொடங்கினார் - செரீனா வில்லியம்ஸ்,கோண்டா முன்னேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலிய ஓபன் வெற்றியுடன் தொடங்கினார்  செரீனா வில்லியம்ஸ்,கோண்டா முன்னேற்றம்

மெல்போர்ன்: 2017ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன், மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில், இன்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 9ம் நிலை வீராங்கனையான பிரிட்டனின் ஜோஹன்னா கோண்டா-70ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் கிறிஸ்டென் பிளிப்கின்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில், 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஜோஹன்னா கோண்டா வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு முன்னேறினார். 2ம் சுற்றில் அவர் தாய்லாந்தின் லூக்சிகா கும்கும் அல்லது ஜப்பானின் நவோமி ஓசாகா ஆகியோரில் ஒரு வரை எதிர்கொள்ள உள்ளார்.

1977ம் ஆண்டில் சூ பெக்கருக்கு பிறகு, ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை கடந்தாண்டு ஜோஹன்னா கோண்டா படைத்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அதிகம் எதிர்பார்க்கப்படும் உலகின் 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் இன்று களம் கண்டார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், சுவிட்சர்லாந்தின் பெலின்டா பெனிக்கை எதிர்கொண்ட செரீனா வில்லியம்ஸ், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.


.

மூலக்கதை