தற்காலிக சின்னம் சேவல்…!!! – ஜெ. தீபா பேரவை அறிவிப்பு

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
தற்காலிக சின்னம் சேவல்…!!! – ஜெ. தீபா பேரவை அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

மேலும் சசிகலா, முதலமைச்சராக வரவேண்டும் என அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதைதொடர்ந்து ஏற்கனவே ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளது. அதில் போட்டியிடும்படி சிலர், வற்புறுத்தினர். சில எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகவும், அந்த தொகுதியில் சசிகலா போட்டியிட வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, அதிமுக தொண்டர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் அவரது வீட்டின் முன்பு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும், தீபாவுக்கு ஆதரவாக பேரவைகளும் தொடங்கப்பட்டு, தீவிர உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலும் தீபா பேரவை என்ற பெயரில் கட்அவுட், போஸ்டர், பேனர்களை வைத்துள்ளனர். இதனால், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.இந்நிலையில், ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதியில் தீபா போட்டியிடுவதாக, பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்காக தற்காலிக சின்னம் சேவல் எனவும், பதிவு எண் 2158 எனவும் தெரியவந்துள்ளது. மேலும், இன்று தீபா அரசியலில் பிரவேசம் செய்வது குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவதாகவும், நாளை தொண்டர்களை சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இதனால், விரைவில் நடைபெற இருக்கும் இடை தேர்தலில், தீபா களம் இறங்குவார் என அதிமுக தொண்டர்கள் எதிர் பார்க்கின்றனர்.

மூலக்கதை