கலே - வாகனத்தில் மோதுண்டு அகதி பலி!
கலே காட்டுப்பகுதியில் இன்று சனிக்கிழமை அகதி ஒருவர் கனரக வாகனம் (ட்ரக்) ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில், Pas-de-Calais பகுதியில், இருபது வயதுடைய இளைஞன் இன்று கனரக வாகனம் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் எதிரோப்பியா நாட்டைச் சேர்ந்த அகதியாகும். இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு A16 சாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த வருட இறுதியில் கலே காட்டுப்பகுதியில் இருந்து அகதிகள் முகம் அகற்றப்பட்டதன் பின்னர், இடம்பெறும் முதலாவது விபத்து இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கலே காட்டுப்பகுதியில் முகாம்கள் அமைத்து தங்கியிருந்தார்கள். அப்போது பிரித்தானியா செல்வதற்கு முயன்று வாகனங்களில் மோதுண்டு மொத்தமாக 16 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.