ஓவியத்தில் மயங்கிய நித்யா மேனன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓவியத்தில் மயங்கிய நித்யா மேனன்

சர்வதேச அளவிலான ஓவியர்களின் படங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஒன்று கொச்சியில் தற்போது நடந்து வருகிறது. சமீபத்தில் அங்கு சென்றார் ஓ. கே.

கண்மணி நடிகை நித்யா மேனன். இந்த அனுபவம்பற்றி அவர் கூறும்போது,’ஆக்கப்பூர்வமான சிந்தனைகளின் வெளிப்பாடாக தங்களின் உணர்வுகளை ஓவியங்களாக வெளிப்படுத்தியிருப்பதை இங்கு காண முடிகிறது.

இதுவரை நான் என் வாழ்வில் பார்த்திராத புதுவித கோணங்களை இந்த ஓவியங்கள் என் கண்முன் நிறுத்தின. எப்போதும் நான் ஒரு குழந்தையை போன்றவள்தான்.

எல்லா விஷயங்களையும் ரசிப்பேன். இந்த ஓவிய கண்காட்சி கூடத்தில் வண்ணங்களை கொண்டு நான் ஓவியம் தீட்டி ரசித்தேன்.

எனது வீட்டில் அமர்ந்து ஓவிய புத்தகங்களில் வண்ணம் தீட்டிய நினைவுகளை எனக்கு இது ஏற்படுத்தியது.

இதுபோன்ற விஷயங்களை நான் எப்போதும் செய்து வந்தாலும் இந்த ஓவியக்கூடத்தில் இந்த அனுபவத்தை பெற்றது நான் மீண்டும் குழந்தை பருவத்துக்கே சென்றதுபோன்ற உணர்வு ஏற்பட்டது’ என்றார்.

.

மூலக்கதை