சிறிலங்காவை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்!
இரத்தினபுரி வைத்தியசாலையில் மூளைக் காய்ச்சல் நோயாளர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
கடந்த மூன்று வாரங்களில் குறித்த வைத்தியசாலையில் மூளைக் காய்ச்சல் என சந்தேகிக்கப்படுவோர் 10 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும், இவர்களில் நால்வருக்கு மட்டுமே இந்த நோய்த் தாக்கம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், இவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் தொடக்கம் ஜனவரி மாதம் வரை இதுபோன்று நோய்கள் அதிகமாக பதிவாவதாக, கூறியு ள்ள அந்த அமைச்சு, எனினும் அது பரவும் நிலையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.