குடிவரவாளர்களுக்கான புதிய நிலையம்!! - இன்று திறப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
குடிவரவாளர்களுக்கான புதிய நிலையம்!!  இன்று திறப்பு!!

இன்று வியாழக்கிழமை குடிவரவாளர்களுக்கான புதிய தங்குமிடம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. 
 
94வது மாவட்டத்தில் உள்ள Ivry பகுதியில், குடிவரவாளர்களுக்கான தங்குமிடம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. 4800 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த புதிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 400 பேர்வரை தங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இந்த நிலையம் பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்காக மட்டும் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தனியே வசிக்கும் ஆண்கள் இங்கு பதிவு தங்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று 99 பேர்களை இங்கு குடியேற்றுகிறார்கள். மேலும் இங்கு தங்குவதற்காக 200 குடுத்தினர், 65 ஜோடியினர் மற்றும் 70 தனிப்பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
 
இன்று திறப்புவிழா நாளில் முதற்கட்டமாக 99 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பராமரிக்கும் செலவுகளை பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. 

மூலக்கதை