முடிவில் மாற்றமில்லை - அதிரடியாக பதிலளித்த டோனி!

PARIS TAMIL  PARIS TAMIL
முடிவில் மாற்றமில்லை  அதிரடியாக பதிலளித்த டோனி!

 இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோஹ்லிக்கு கைகொடுக்க தயாராக இருப்பதாக முன்னாள் தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

 
மேலும், தலைவர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள எனது முடிவில் மாற்றமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஒருநாள் அணிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகிதற்கு பிறகு டோனி இன்று முதன்முறையாக நிருபர்களை சந்தித்து பேசினார்.
 
அப்போது அவர் கூறுகையில், ஒரு அணியில் இரட்டை கேப்டன்கள் நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒருநாள்-டெஸ்ட் போட்டிகளில் ஒரே கேப்டன் செயல்படுவதே நல்லது.
 
நான் கேப்டன் என்ற வகையில் சிறப்பான காலங்களையும், மிகவும் கடினமான காலங்களையும் கடந்துள்ளேன்.
 
விராட் கோஹ்லி திறமையானவர். அவர் தலைவர் பதவியில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. அனுபவம் கிடைக்கும்போது கேப்டன் பொறுப்பு அவருக்கு மேலும் சிறப்பானதாக மாறும்.
 
முன்னாள் கேப்டன் என்ற வகையில், வியூகங்கள் வகுக்கும்போது புதிய கேப்டன் கோஹ்லிக்கு உதவிகள் செய்ய தயாராக உள்ளேன். விக்கெட் கீப்பர் என்பவர் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் துணை கேப்டன் தான் என்று கூறியுள்ளார்.

மூலக்கதை