கண்பார்வை பெறுகிறார் பெண் பாடகி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கண்பார்வை பெறுகிறார் பெண் பாடகி

தமிழில் ‘என்னமோ ஏதோ’ படத்தில் புதிய உலகை, ‘வெள்ளக்கார துரை’யில் காக்கா முட்டை, ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் எந்த வழி, ‘தெறி’ படத்தில் என்ஜீவன், ‘வீரசிவாஜி’யில் சொப்பனா சுந்தரி’ உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் பாடியிருப்பவர் வைகம் விஜயலட்சுமி. மலையாளம், தெலுங்கு படங்களிலும் மற்றும் பக்தி பாடல்களும் பாடி இருக்கிறார்.

பிறவியிலேயே பார்வையற்றவர். சமீபத்தில் இவருக்கும் இசை கலைஞர் சந்தோஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

வரும் மார்ச் மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இதற்கிடையில் வைகம் விஜயலட்சுமி பார்வை பெறுவதற்கான சிகிச்சைகளை டாக்டரிடம் நீண்ட காலமாக பெற்று வந்தார்.

அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. விரைவில் அவருக்கு பார்வை கிடைக்க வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி விஜயலட்சுமி கூறும்போது, ‘கண் பார்வையை முற்றிலுமாக பெற முடியாவிட்டாலும் மனிதர்களின் மங்களான தோற்றங்களையும், பொருட்களையும் பார்க்கும் அளவுக்கு எனக்கு பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.

தெளிவான பார்வை கிடைக்காவிட்டாலும் ஒளியையும், பிம்பங்களையும் என்னால் காணமுடியும்’ என்றார்.

.

மூலக்கதை