ஐபிஎல் தொடரில் விளையாட இங்கிலாந்து வீரர் விருப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் தொடரில் விளையாட இங்கிலாந்து வீரர் விருப்பம்

மும்பை: இந்திய ஏ அணிக்கு எதிராக நேற்று முன் தினம் நடந்த முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 62 ரன் எடுத்தார். அவர் அளித்துள்ள பேட்டி: இந்திய ஏ அணிக்கு எதிராக நடந்த முதல் பயிற்சி போட்டியின்போது, மைதானத்தில் அதிகளவு ரசிகர்கள் இருந்தனர்.

மைதானத்தில் திரண்டிருக்கும் ரசிகர்கள் முழுவதுமாக, எதிரணிக்கு ஆதரவு அளிக்கும்போது, நிதானமாக விளையாட வேண்டும். இதன் மூலம் ஏற்படக்கூடிய அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பதை இந்தியாவில் கடந்தாண்டு நடந்த டி20 உலக கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் உள்ளிட்ட தொடர்களின் போது கற்றுக்கொண்டேன்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை