இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் எளிதல்ல - அஸ்வின் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் எளிதல்ல  அஸ்வின் பேட்டி

புதுடெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் 15ம் தேதி தொடங்கவுள்ள ஒரு நாள் தொடர் எளிதாக இருக்காது என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி: பல்வேறு அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடிய பிறகு, ஒரு நாள் தொடரில் பங்கேற்பது சவாலானது.

ஒரு நாள் போட்டிகளை பொறுத்த வரை இங்கிலாந்து வலுவான அணி. இதனால் இந்த தொடர் இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு, முழு பலம் பொருந்திய அணியாக விளையாடவுள்ளோம். ஏனெனில் யுவராஜ் சிங் அணிக்கு திரும்பியுள்ளார்.

அவரது அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

.

மூலக்கதை