சிறந்த கேப்டன்களில் டோனியும் ஒருவர் - முரளிதரன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிறந்த கேப்டன்களில் டோனியும் ஒருவர்  முரளிதரன்

 கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி, சிறந்த இந்திய கேப்டன்களை தேர்வு செய்தார். இதில், டோனிதான் மிகச்சிறந்த கேப்டன் என கூறிய அவர், கங்குலியை தேர்வு செய்யவில்லை.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் விஷன் 2020 திட்ட ஆலோசகருமான முத்தையா முரளிதரன், எனது கருத்துப்படி கங்குலிதான் சிறந்த கேப்டன் என தெரிவித்தார்.

ரவி சாஸ்திரியால் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் இந்த விவகாரத்தில் தற்போது அனைவரையும் பேலன்ஸ் செய்து செல்லும் வகையில், டோனியின் சிறப்பையும் முரளிதரன் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து முரளிதரன் கூறுகையில், எனது நீண்ட கிரிக்கெட் கேரியரில், இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் டோனியும் ஒருவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்றாண்டுகள் டோனியின் தலைமையின் கீழ் விளையாடியபோது, டோனியிடம் நான் திமிரை பார்த்ததே இல்லை என்றார்.


.

மூலக்கதை