பிபா சிறந்த வீரர் விருதுக்காக ரொனால்டோ தெரிவு

PARIS TAMIL  PARIS TAMIL
பிபா சிறந்த வீரர் விருதுக்காக ரொனால்டோ தெரிவு

 2016ஆம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா விருதுக்கு, போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
பார்சிலோனா அணியின் மெஸ்ஸி மற்றும் ஜெர்மனியின் அந்தோனியா கிரிஸ்மேன் ஆகியோரை பின் தள்ளி 31 வயதான ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார். 
 
முன்னதாக இந்த ஆண்டிற்கான பல்லோ டி'ஓர் விருது கடந்த டிசம்பரில் அவருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. சாம்பியன்ஸ் லீக் மற்றும் ரியல், யூரோ கிண்ணங்களை வென்று கொடுத்ததை அடுத்து அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவை சேர்ந்த கார்லி லோய்டு என்பவருக்கு சிறந்த பெண் வீரருகான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை