ஆப்கான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆப்கான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு!

 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் சபூர் ஜார்தன் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

 
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் சபூர் ஜார்தன். 29 வயதான இவர், கடந்த 2009ல் சர்வதேச அளவில் அறிமுகமானார்.
 
இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 39 ஒருநாள், 27 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தவிர, கடந்த 2015 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.
 
இவர், தனது உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது, இவரது காரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். பின் துப்பாக்கியா ல் தொடர்ந்து தாக்கியதில், இவரது கார் முழுமையாக சேதமடைந்தது. ஆனால் சபூர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினார்.
 
இந்த சம்பவத்துக்கு தனி நபரோ , வேறு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. தவிர, இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ, அறிக்கையோ வெளியிடவில்லை. 
 
 
 

மூலக்கதை