தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம்! சோகத்தில் தமிழக மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம்! சோகத்தில் தமிழக மக்கள்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு என்ற சாதாரண பிரச்சினைதான் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் ரத்தக்கொதிப்பு, நிரிழிவு, கல்லீரல், சிறுநீரக பாதிப்பு இருப்பது போன்ற தகவல்களும் ஊடகங்களில் பரவின. பின்னர் அவர் உடல்நிலை தேறி விட்டார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி இன்று முதல்வர் காலமானார்.
 
அம்மா, புரட்சித்தலைவி என்று கட்சியினராலும் மக்களாலும் அழைக்கப்படும் ஜெயலலிதா, 1991 ல் தான் முதன்முதலாக தமிழக முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றார். அதன்பிறகு, இப்போதுவரை 6 முறை முதல்வரானார்.

மூலக்கதை