கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில், ராதிகா ஆப்தே!
‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே அந்த படத்துக்குப் பின் எந்த புதிய தமிழ் படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது அவர் ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஜி.ஆர். ஆதித்யா இயக்கு கிறார். இவர், ‘சவரக்கத்தி’ படத்தை டைரக்டு செய்பவர்.
புதிய தமிழ் படத்தில் ராதிகா ஆப்தே நடிப்பது பற்றி டைரக்டர் ஜி.ஆர்.ஆதித்யா கூறும்போது, “என் அடுத்த படத்துக்காக ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். கதையை கேட்டதும் ராதிகா ஆப்தே நடிக்க சம்மதித்தார். என்றாலும் அவர் முறைப்படி இன்னும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை” என்றார்!