யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கொலை தொடர்பில் ஜனாதிபதி கவனம்
சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5 பொலிசாரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும் படி யாழ். நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.