குஜராத்திலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி ஹோண்டா நிறுவனம் துவக்கியது
ஆமதாபாத்;ஹோண்டா நிறுவனம், குஜராத் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை, இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய துவங்கி உள்ளது. ஹோண்டா மோட்டார் சைக்கிளுக்கு, குஜராத் மாநிலத்தில், தொழிற்சாலை உள்ளது. அங்கு, கடந்த பிப்., மாதம், ‘ஆக்டிவா, டியோ’ மாடல் வாகனங்களின் உற்பத்தி துவங்கியது. ஆண்டுக்கு, 12 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் உடையது அந்த ஆலை.இந்நிலையில்,ஹோண்டா நிறுவனம், குஜராத் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை ஏற்றுமதி செய்ய துவங்கி உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த வாரம், குஜராத் ஆலையில் இருந்து, முந்த்ரா துறைமுகம் வழியாக, ஏற்றுமதி துவங்கியது. முதற்கட்டமாக, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்திற்கு, இலங்கை மற்றும் நேபாளம் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.