ஒரே நாளில் 45 ஆயிரம் 'சிம் கார்டு' : பி.எஸ்.என்.எல்., விற்பனை

தினமலர்  தினமலர்
ஒரே நாளில் 45 ஆயிரம் சிம் கார்டு : பி.எஸ்.என்.எல்., விற்பனை

தமிழகத்தில், ஒரே நாளில், 45 ஆயிரம், 'மொபைல் போன்' வாடிக்கையாளர்களை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் பெற்றுள்ளது. தொலைத் தொடர்பு துறையில், அதிகரித்து வரும் போட்டியால், வாடிக்கையாளர்களை கவர, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தமிழகம் முழுவதும், 'மெகா மேளா'வை நடத்தியது. எதிர்பார்த்த அளவில், புதிய, தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் கிடைக்காவிட்டாலும், அதிக அளவு, மொபைல் போன் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.
இது குறித்து, தமிழக தொலைத் தொடர்பு வட்ட அதிகாரிகள் கூறியதாவது: வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், சென்னை வட்டம் தவிர்த்த, இதர மாவட்டங்களில், செப்., 15ல், 'மெகா மேளா' நடத்தினோம். அன்று, உடனே இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தோம். அதனால், ஒரே நாளில், 45 ஆயிரம், மொபைல் போன், 'சிம் கார்டுகள்' விற்பனையானது. இதுதவிர, 2,600, 'இன்டர்நெட், பிராட் பேண்ட்' மற்றும் தொலைபேசி வாடிக்கையாளர்களும், புதிதாக கிடைத்தனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை