ஊட்டியில் துவங்குகிறது செப்டம்பர் மாதம் மலர் கண்காட்சி
உதகையில் செப்டம்பரில் தொடங்கவுள்ள இரண்டாவது சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டியில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் இறுதி வரை சுற்றுலாவுக்கு ஏற்றவகையில் இரண்டாவது சீசன் காணப்படுகிறது.
இந்த சீசனில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தாவரவியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளில் பிக்கோனியா மேரிகோல்டு, பால்சம் டெய்லியா உள்ளிட்ட மலர் பூக்க தொடங்கி உள்ளன.