ஆஸி தொடர் : இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது இந்தியா!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஆஸி தொடர் : இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது இந்தியா!

Saturday, 23 January 2016 15:11

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி, 7 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களை எடுத்தது. டாவிட் வார்னர் 122 ஓட்டங்களையும், மிஷெல் மார்ஷ் 102 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்களில் கடைசி இரு பந்துகள் மீதமிருந்த போது வெற்றியை தனதாக்கியது. ரோகித் ஷர்மா 99 ஓட்டங்களையும், தவான் 78 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் பண்டேய், எம்.எஸ்.தோனி இணைந்து மிக நிதானமாக ஆடி இந்தியாவை வெற்றி நோக்கி நகர்த்தினர்.

இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனியின் ஸிக்ஸர், பாண்டேயின் பவுன்றி ஆகியன இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுத்தன.

முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்த போதும், ஒவ்வொரு போட்டியிலும் போராடி இறுதிவரை முன்னேறியே தோல்வி அடைந்திருந்தது. ஐந்தாவது போட்டியில் வென்றதன் மூலம், ஆறுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளது. போட்டி நாயகனாக மைக்கெல் பாண்டேய், தொடர் நாயகனாக ரோகித் ஷர்மாவும் தெரிவாகினர்.

மூலக்கதை