ராஷ்மிகா மீது படக் குழு கோபம்

தினமலர்  தினமலர்
ராஷ்மிகா மீது படக் குழு கோபம்

படக் குழுவினர் அனுமதி இல்லாமல், நடிகை ராஷ்மிகா, தான் நடிக்கும் தமிழ் படத்தின் பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதால், படக் குழுவினர் கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட பிரமாண்ட படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து, பிரபலம் ஆனவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், பெயரிடப்படாத தமிழ் படம் ஒன்றில் அவர் நடித்து வருகிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் அந்தப் படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகாவுடன் இணைந்து, நெப்போலியன், யோகிபாபு, சதீஸ், மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

படத்துக்கான பெயரை, சில நாட்கள் கழித்து, வித்தியாசமான வெளியிடலாம் என, படக் குழுவினர் தீர்மானித்து வைத்திருந்தனர். படத்தின் பெயரை வெளியிடுவதற்கான நிகழ்ச்சி நடத்தலாம் எஅவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையிலி, நடிகை ராஷ்மிகா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுல்தான் படபிடிப்பில் நான் காவது நாள் என, ஒரு போஸ்ட் போட்டு, படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

படத்தின் பெயர் சுல்தான் என்பது எவ்வித சஸ்பென்ஸும் இல்லாமல் சப்பென வெளியிடப்பட்டு விட்டதால், படக் குழு ராஷ்மிகா மீது கடும் கோபமாக இருக்கிறதாம்.

மூலக்கதை