சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார் வழங்கும் சலுகை

தினமலர்  தினமலர்
சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார் வழங்கும் சலுகை

சென்னை:‘பிக் பஜார்’ நிறுவனம், ‘ஆறு நாட்கள் மிகப் பெரிய சேமிப்பு’ எனும் கொண்டாட்டத்தை துவக்கி உள்ளது.


நாட்டின், 73வது சுதந்திர தினத்தையொட்டி, 10ம் தேதி முதல், 15ம் தேதி வரை இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது.இந்நாட்களில், 3,000 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்து, 1,200 ரூபாய் வரை, ‘கேஷ் பேக்’ பெறலாம். எஸ்.பி.ஐ., கார்டுகளைப் பயன்படுத்தி, கூடுதலாக, 7 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.



இது குறித்து, பிக் பஜார் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி, சதாஷிவ் நாயக் கூறிய தாவது:இந்த ஆண்டு, வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகள் தரும் வகையில், ‘ஆறு நாட்கள் மிகப்பெரிய சேமிப்பு’ எனும் கருத்துருவுடன் வந்துள்ளோம்.



இந்த ஆறு நாட்களில், வாடிக்கையாளர்கள் தாங்கள்விரும்பும் பொருட்களை வாங்குவதுடன், மிகப் பெரிய சேமிப்பையும் பெறுவர். ஒரே கூரையின் கீழ், அனைத்து விதமான பொருட் களையும் வாங்கும் வாய்ப்பை பயன்படுத்தி, மிகப் பெரிய சேமிப்பையும் பெற, வாடிக்கையாளர்களை அழைக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை