நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவோம்... பயிற்சியாளர் பாஸ்கரன் உற்சாகம்

தினகரன்  தினகரன்
நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவோம்... பயிற்சியாளர் பாஸ்கரன் உற்சாகம்

புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் 20 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் பின்தங்கி உள்ளது (11 போட்டி, 3 வெற்றி, 7 தோல்வி, ஒரு சரிசமன்). சென்னையில் வெற்றியுடன் கணக்கை தொடங்கிய அந்த அணி, அடுத்த 5 போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. வெளியூர் போட்டிகளிலும் இதே நிலை நீடிக்கிறது. இதே பிரிவில் 32 புள்ளிகளுடன் 4 இடத்தில் இருக்கும் தெலுகு டைடன்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது.  அகமதாபாத்தில் நடைபெற உள்ள இப்போட்டி குறித்து தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் பாஸ்கரன் நமது நிருபரிடம் கூறியதாவது: நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் இனி களம் காண உள்ளோம்.  ஒரு வார இடைவெளியில் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே செய்த சின்னசின்ன தவறுகள், பலவீனங்கள் இனி நிகழாமல் பார்த்துக் கொள்ளவோம். பின்னடைவில் இருந்து நிச்சயம் மீள்வோம். வீரர்கள் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள். எங்களுக்கு இன்னும் 11 போட்டிகள் உள்ளன. அதில் குறைந்தது 5, 6 போட்டிகளில் கண்டிப்பாக வெல்வோம். நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவது தான் எங்கள் இலக்கு.  அதை நடத்திக் காட்டுவோம். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்தார்.

மூலக்கதை