ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-ஐ வீழ்த்தி அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன்

தினகரன்  தினகரன்
ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்ஐ வீழ்த்தி அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன்

லண்டன்: லண்டனில் நடைபெற்ற ஏடிபி உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரவ், ஜோகோவிச்-ஐ வீழ்த்தி கோப்பையை வென்றார். இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஸ்வெரவ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்-ஐ எளிதில் வீழ்த்தினார். 21 வயதேயான அலெக்சாண்டர் ஸ்வெரவ் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன் சாம்பியன் படத்தையும் கைப்பற்றியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஏடிபி சாம்பியன் இறுதி போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை அலெக்சாண்டர் ஸ்வெரவ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு குறைந்த வயதில் ஏடிபி சாம்பியன் இறுதி போட்டியில் ஜோகோவிக் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை