புரோ கபடி லீக் போட்டி புனேவை வீழ்த்தியது தெலுங்கு அணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி லீக் போட்டி புனேவை வீழ்த்தியது தெலுங்கு அணி

மும்பை: புரோ கபடி லீக் போட்டியில், புனே அணியை 28-25 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு அணி வீழ்த்தியது. புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.

இதில், 12 அணிகள் பங்கேற்றுள்ளன. மும்பையில் நேற்று  நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு மற்றும் புனே அணிகள் பலப்பரிட்சை நடத்தின.   போட்டி துவங்கியது முதலே தெலுங்கு அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

இந்நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியில் 11-17 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு அணி முன்னிலை வகித்தது. 2வது பாதியில் இரு அணிகளும் துடிப்புடன் விளையாடியதால் ஆட்டம் விறுப்பாக இருந்தது.

இறுதியில், தெலுங்கு அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வென்றது. இது, தெலுங்கு அணிக்கு கிடைத்த 5வது வெற்றியாகும்.

இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா, மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

மும்பையில் இன்று நடைபெறும் போட்டி தமிழ் தலைவாஸ் அணிக்கு முக்கியமானதாகும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் 3ல் மட்டுமே வென்றுள்ளது. ‘பி’ பிரிவில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இன்னும் 12 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், 10 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் உடன் மோதும் அரியானா அணி 12 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்றுள்ளது.

8ல் தோல்வி அடைந்துள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இப்போட்டி முக்கியம் என்பதால் அரியானா அணி, தமிழ் தலைவாஸ் அணிக்கு சவாலாக இருக்கும்.



.

மூலக்கதை